1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 23 ஜூன் 2016 (13:26 IST)

என் நண்பன் போல யாரு மச்சான்; விஜயகாந்துடன் நட்பு தொடரும்: வைகோ

மக்கள் நல கூட்டணியில் இருந்த தேமுதிக விலகி உள்ளாட்சி தேர்தலை தனித்து சந்திக்கும் என அறிவித்தது. எங்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றாலும் ஜி.கே.வாசன், விஜயகாந்த் ஆகியோருடன் எங்கள் நட்பு நீடிக்கும் என வைகோ கூறியுள்ளார்.


 
 
கடந்த சட்டசபை தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிகவும், ஜி.கே.வாசனின் தமாகாவும் மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்து மோசமான தோல்வியை சந்தித்தது.
 
இதனையடுத்து மக்கள் நல கூட்டணியில் இருந்து இந்த இரு கட்சிகளும் விலகும் என தேர்தல் முடிந்த சில தினங்களில் இருந்தே யூகங்கள் வெளியாகின. கட்சியின் நிர்வாகிகளும் மக்கள் நல கூட்டணியில் இருந்து விலகவே வலியுறுத்தினர்.
 
இதனையடுத்து தமாகாவும், தேமுதிகவும் மக்கள் நல கூட்டணியில் இருந்து விலகி உள்ளன. உள்ளாட்சி தேர்தலை தனியாக சந்திப்போம் என தேமுதிக அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் இது பற்றி கூறிய மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளார் வைகோ, தேமுதிகவும், தமாகாவும் எங்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றாலும் ஜி.கே.வாசன், விஜயகாந்த் ஆகியோருடன் எங்கள் நட்பு நீடிக்கும் என கூறியுள்ளார்.