1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 22 ஏப்ரல் 2024 (17:19 IST)

ED வழக்கின் அசல் ஆவணங்கள்..! செந்தில் பாலாஜியிடம் ஒப்படைப்பு..!!

senthil balaji ed
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறையின் அசல் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன.
 
வங்கியிலிருந்து நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்ட அசல் ஆவணங்களுக்கும், அமலாக்கத் துறை வழங்கிய வங்கிச் சாா்ந்த ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் இருப்பதாக செந்தில்பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, வங்கியின் அசல் ஆவணங்களை வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தையும் செந்தில் பாலாஜிக்கு வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, வங்கித் தரப்பில் சமா்ப்பிக்கப்பட்ட அசல் ஆவணங்களைப் பெறுவதற்காக, சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.


பின்னர், அமலாக்கத்துறை வழக்கின் அசல் ஆவணங்கள் அனைத்தும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரிய மனுவில் ஓரிரு நாளில் வாதங்கள் தொடரும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.