1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 19 நவம்பர் 2021 (13:33 IST)

விவசாயிகளின் நண்பன் பிரதமர் மோடி - ஓ.பி.எஸ்

மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட வேளாண் சட்டங்கள் வாபஸ் என்ற அறிவிப்பு என்று வெளியானதிலிருந்து தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் சற்று முன் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் இது குறித்து கூறிய போது விவசாயிகளின் நண்பன் பிரதமர் மோடி என்று தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்த இந்திய பிரதமர் மோடி அவர்களின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றும் அதிமுக சார்பில் பிரதமர் மோடி எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் 
 
மேலும் பிரதமரின் பெருந்தன்மையும் விவசாயிகளின் மேலுள்ள அக்கறையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் விவசாயிகளின் நண்பன் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டப் பட்டுள்ளது என்றும் ஓபிஎஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.