1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 6 மே 2021 (13:08 IST)

1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்று தமிழகம் வருகை

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக அதிகமாக பாதித்து வருகிறது என்றும் நேற்று ஒரே நாளில் 23 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழக மக்கள் கூறுவதில் இருந்து தங்களை காத்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதே நேரத்தில் 18 வயது மேலானவர்களுக்கு தடுப்பூசி போடுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பதும் ஆர்டர் செய்த தடுப்பூசிகள் இன்னும் வரவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழகத்திற்கு கூடுதலாக ஒரு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று வருகை தர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 60,03,590 கோவிஷீல்டு டோஸ்கள், 10,82,130 கோவாக்சின் டோஸ்கள் தமிழகம் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.