செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (04:14 IST)

இனி விண்ணப்பித்த நான்கு நாட்களில் பாஸ்போர்ட்

விண்ணப்பித்த நான்கு நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும் புதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் தெரிவித்தார்.
 

 
சென்னை பத்திரிக்கை தகவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் எவரும் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் கார்ட், ஆகிய மூன்று ஆவணங்களுடன் ஐ-அநெக்ஸ்ச்சர் இணைத்திருந்தால் நான்கு நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும்.
 
பாஸ்போர்ட் கிடைக்கப்பெற்றவுடன் காவல்துறையின் சான்றாய்வு மேற்கொள்ளப்படும் என்றும் இத்திட்டத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தட்கல் எனப்படும் துரித பாஸ்போர்ட் திட்டத்திலிருந்து இது முற்றிலும் மாறானது” என்று அவர் கூறியுள்ளார்.
 
மேலும் அவர், ‘பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிப்பார்ப்பதற்கான கால அளவு 19 நாட்களில் இருந்து 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பம் அளித்த மறுநாளே அவர்கள் சான்றிதழ் சரிப்பார்ப்பதற்கு அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.