1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 16 பிப்ரவரி 2022 (12:45 IST)

திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசித்த 2 பள்ளிகளுக்கு நோட்டீஸ்!

திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த 2 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது தளர்வுகள் காரணமாக அன்றாடம் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் அறிவிக்கப்பட்டு நடந்து வருகிறது.
 
தேர்வுகள் நடந்து வரும் நிலையில் திருப்புதல் தேர்வுக்கு முந்தைய நாளே வினாத்தாள்கள் கசிந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. இந்த விசாரணையில் திருவண்ணாமலையில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளில் இருந்து தான் திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்துள்ளன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 
வினாத்தாள் கசிந்த முறைகேட்டில் ஈடுபட்ட பள்ளிகள் மீதும் அதன் நிர்வாகிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்தது. இந்நிலையில் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள் செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 
 
தேர்வு முறைகேடுகளை தடுக்க தவறியதால் பள்ளிக்கல்வித்துறை அருள் செல்வம் மீது இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியாவுக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
 
புதிதாக பொறுப்பேற்றுள்ள திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த 2 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக 2 தனியார் பள்ளிகள் விளக்கமளிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.