1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 21 ஏப்ரல் 2022 (10:43 IST)

கொரோனாவால் மரணமில்லா நாள்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
ஆம், தமிழகத்தில் புதிதாக 31பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது என தெரிகிறது. இருப்பினும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், தடுப்பூசி செலுத்துதல் ஆகியவை முன்நிறுத்தப்பட்டு வருகிறது.
 
அதோடு ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், 4 வது அலை உருவாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிற நிலையில் இன்னும் 5 மாதங்களில் கையில் இருக்கும் தடுப்பூசிகள் காலாவதியாகும் என்பதால் இதனை பயன்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.