வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : புதன், 1 ஜூலை 2020 (15:22 IST)

என்.எல்.சி விபத்து : முதல்வர் பழனிசாமி நிவாரணம் அறிவிப்பு!

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெய்வேலி NLC-யில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்து தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்.எல்.சி அனல் மின் நிலைய விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு  இரங்கள் தெரிவித்து, ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

அதில், என்.எல்.சி விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.