1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 10 ஜூன் 2020 (09:08 IST)

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி தொலைபேசி எண்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக தனியாக இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் சில இடங்களில் கொரோனா பாதித்தவர்களுக்கு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து மருத்துவ சேவை அளிக்கும் விதமாக புதிதாக அழைப்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், 044 4006 7108 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் 108 சேவை உடனடியாக கிடைக்கும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.