1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 12 மே 2015 (07:32 IST)

ஜெயலலிதாவுக்கு தொலைபேசியில் வாழ்த்து கூறினார் நரேந்திர மோடி

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
 
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது. கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதா குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கியது.
 
அதில், ஜெயலலிதா  உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்வதாகவும், அவர்கள் குற்றமற்றவர்கள் என்றும் தெரிவித்தது.
 
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். 
 
அதேபோல், தமிழக ஆளுநர் கே.ரோசய்யா ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு, பூங்கொத்து ஒன்றையும் அனுப்பியுள்ளார்.