1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 26 ஆகஸ்ட் 2020 (11:39 IST)

நைட் ஷிஃப்ட் காவலர்களுடன் ரோந்து பணியில் முதல்வர்!!

புதுச்சேரி முதல்வர் நாராயணிசாமி நேற்று இரவு காரில் ரோந்து சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தில் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதை போல புதுச்சேரியில் செவ்வாய்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரைமுழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. 
 
ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் அரசின் உத்தரவை கடைபிடித்து வீட்டுக்குள் இருக்கிறார்களா என்பதை முதல்வர் நாராயணசாமி நேற்று இரவு காரில் சென்று ஆய்வு செய்தார். புதுச்சேரியின் எல்லைகளான கோரிமேடு, காலாப்பட்டு பகுதிகளில் பார்வையிட்டார்.