1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (09:23 IST)

சென்னையில் மாநகர பேருந்து திடீர் மாயம்: பெரும் பரபரப்பு!

சென்னையில் மாநகரப் பேருந்து ஒன்று திடீரென மாயமாகி விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் மாநகரப் பேருந்துகள் கடந்த சில வாரங்களாக இயங்கி வரும் நிலையில் சென்னையில் மாநகரப் பேருந்து ஒன்றை மர்ம நபர் ஒருவர் திடீரென ஓட்டிச்சென்று மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சென்னை அண்ணாநகர் பணிமனையில் இருந்த மாநகர பேருந்து ஒன்றை மர்மமான முறையில் மர்மநபர் ஒருவர் ஓட்டி சென்றதால் அந்த பணிமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து ஜிபிஎஸ் மூலம் பாடி மேம்பாலம் அருகே மாயமான பேருந்து இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர் 
 
இதனையடுத்து உடனடியாக அந்த பகுதிக்கு சென்று பேருந்தை மீட்டனர். பேருந்தை அண்ணாநகர் பணிமனையில் இருந்து ஓட்டிச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தற்போது போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்