வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: வியாழன், 14 மார்ச் 2019 (18:39 IST)

என் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்க முடியாத நிலைக்குத் தள்ளிட்டாங்க... பார் நாகராஜ்!

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக நடந்த  அடிதடி வழககில் கைதுஜாமீனில் வெளிவந்தவர் பார் நாகராஜ். 
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பார் நாகராஜ் தன்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளித்தார்.
 
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாகராஜ்,  என்னையும், என் குடும்பத்தினரையும் மிகுந்த மன உளைச்சுலுக்கு உள்ளது. வேறு யாரோ இருக்கும் ஆபாச வீடியோவை, நான் இருப்பதாக சொல்லி தவறான விஷயத்தைப் பரப்பிகிட்டு இருக்காங்க. அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. இந்த வழக்கின் விசாரணைக்கு எப்ப கூப்புட்டாலும் ஆஜராக தயாராக இருக்கேன். எனக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகுது. குழந்தை பிறந்து 25 நாள்களே ஆன நிலையில், என்னை என் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்க முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டாங்க... என்றார்.