1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (17:52 IST)

மவுலிவாக்கம் கட்டட விபத்து: நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சென்னை போரூர் அருகே உள்ள மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டடம் கடந்த ஜுன் மாதம் 28 ஆம் தேதி இடிந்து விழுந்தது. இதில் 60-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
 
27 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்துக்கு காரணமான அடுக்குமாடி குடியிருப்பை கட்டிய கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் மனோகரன் உள்பட 8 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
 
இவர்கள் மீதான வழக்கு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இன்று நீதிபதி சந்தோஷ் முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது குற்றம்சாற்றப்பட்ட எட்டு பேர் மீதான குற்றப்பத்திரிக்கையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர். பின்னர் இவ்வழக்கை வரும் செப்டம்பர் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சந்தோஷ் உத்தரவிட்டார்.