செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (10:41 IST)

அசிங்கமாக திட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: ஆர்கே நகரில் பரபரப்பு!

அசிங்கமாக திட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: ஆர்கே நகரில் பரபரப்பு!

ஆர்கே நகர் தேர்தலில் அதிமுகவின் சசிகலா அணியை சேர்ந்த டிடிவி தினகரனை எதிர்த்து ஓபிஎஸ் அணியை சேர்ந்த மதுசூதனன் போட்டியிடுகிறார். இந்த இரு அணிகளும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


 
 
இந்த பிரச்சாரத்தின் போது சசிகலா அணியில் உள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓபிஎஸ் அணியில் உள்ள பெண் பேச்சாளர்கள் இருவரை அசிங்கிமாக திட்டியதாகவும், தாக்கியதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
ஆர்கேநகர் தொகுதியில் A.E.கோவில் தெருவில் ஓபிஎஸ் அணியின் மதுசூதனனுக்கு ஆதரவாக பொம்மி, உமையாள் என்ற இரண்டு பெண் நிர்வாகிகள் பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனால் அதே நேரத்தில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் பிரச்சாரம் செய்து வந்தார்.
 
அப்போது ஓபிஎஸ் அணியின் பெண் நிர்வாகிகளான பொம்மி, உமையாள் ஆகியோர்களை பார்த்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அவர்களை அசிங்கமாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உமையாள் என்ற பெண்ணின் மூக்கில் குத்தியதாகவும் கூறப்படுகிறது.
 
ஓபிஎஸ் அணியை சேர்ந்த பெண்ணை சசிகலா அணியை சேர்ந்த அமைச்சர் அசிங்கமாக பேசி தாக்கியதால்அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த பெண்கள் இருவரும் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்துள்ளனர்.