வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 30 மார்ச் 2020 (23:47 IST)

டெல்லியில் நடைபெற்ற கூட்டம்… கலந்துகொண்ட தமிழர்கள் 500 பேர் பங்கேற்பு !!

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ளதுஇந்த கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 748066 பேர் பாதிப்பட்டுள்ளனர்.35388 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்தியாவில் 1071 பேர் பாதிப்பட்டுள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர்

இந்த நிலையில், கொரோனா வைரஸை தடுக்கும் பொருட்டு, இந்திய அரசு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வேலைகளுக்குச் செல்லாமல் வீடுகளில் ஓய்வெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒரு தனியார் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பலர் கலந்துகொண்டனர். இதில் தமிழர்கள் 500 பேர் பங்கேற்றனர். இதில் 1500  பேரில்  981 பேரின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது.