தொடர்புடைய செய்திகள்
- லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் தேர்தல் வியூக நிறுவனம்.. விஜய்யுடன் பேச்சுவார்த்தை..!
- கஞ்சா, போதை மாத்திரை ஆன்லைனில் விற்பனை: சென்னை பொறியியல் மாணவர்கள் கைது
- திருச்சியில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பதட்டம்..!
- திருவொற்றியூர் பள்ளியில் மீண்டும் மாணவர்கள் வாந்தி, மயக்கம்! - பெற்றோர் வாக்குவாதம்!
- சென்னை தனியார் பள்ளியில் திடீரென ஏற்பட்ட வாயுக்கசிவு: மருத்துவமனையில் 35 மாணவிகள்..!
மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் சேராத மாணவர்களுக்கு தடை: அதிரடி அறிவிப்பு..!
மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்து, கல்லூரியில் சேராத மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் பயில ஒரு ஆண்டு தடை விதிக்கப்படும் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டின் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், இந்த கலந்தாய்வு இறுதிச்சுற்றில் மருத்துவ கல்லூரியில் படிக்க இடங்கள் பெற்றும், கல்லூரியில் சேராத 20 மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் சேர ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஆறு எம்பிபிஎஸ் இடங்கள், அரசு பல் மருத்துவ கல்லூரியில் நான்கு பிடிஎஸ் இடங்கள், தனியார் கல்லூரிகளில் 24 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. கலந்தாய்வு முடிந்ததால் இந்த இடங்கள் இந்த ஆண்டு முழுவதும் காலியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் மாணவர்கள் சேராததால் தான் இந்த காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் சேர ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
