செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 9 ஜூன் 2021 (23:24 IST)

பல குடும்பங்கள் பசியில்...உதவுங்கள்- பிரபல நடிகை வேண்டுகோள்

இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலைத் தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில் சில நாட்களாக இதன் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது.

இந்நிலையில், ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக தனியார் தொண்டு நிறுவனங்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உதவி வருகின்றனர்.

இந்நிலையில், கொரொனா கால ஊரடங்கில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முடிந்தளவு உதவு செய்ய முன்வர வேண்டுமென ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.

மேலும், பி தி மிராக்கிள் ( BE THE MIRACLE) என்ற அமைப்பின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார். எனவே இதுகுறித்த ஹேஸ்டேக் பதிவிட்டு, கொரொனா கால ஊரடங்கில் பல குடும்பங்கள் பசியுடன் உள்ளனர். எனவே அவர்களுக்கு உதவி செய்ய நீங்கள் முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.