1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 7 அக்டோபர் 2016 (18:54 IST)

சாதிப் பெயரை கூறி இழிவுபடுத்திய மேலாளர்: நடத்துனர் தற்கொலை

மதுரை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கிளை மேலாளர் சாதி பெயரை கூறி திட்டியதால், நடத்துனர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.


 

 
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் சிவக்குமார் என்பவர் நடத்துனராக பணியாற்றி வருகிறார்.
 
பணிமனை கிளை மேலாளர் கோபால்சாமி மற்றும் பொது மேலாளர் ரவிசந்தர் ஆகியோர் நடத்துனர் சிவக்குமாரை சாதி பெயரை சொல்லி திட்டியுள்ளனர்.
 
பல நாட்களாக தொடர்ந்து சிவகுமாரை சாதி பெயர் சொல்லியே திட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சிவக்குமார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
 
உடனே சிவக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.