1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 20 ஜனவரி 2022 (11:14 IST)

காளைகள் மற்றும் உரிமையாளர்களை தாக்கியவர்கள் கைது!

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் போது 50க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்களை தாக்கியவர்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்த போது அங்கு நெரிசல் காரணமாக காளைகளுக்குள் நடந்த சண்டையில் தன் காளையை தாக்கிய மற்ற காளைகள் மற்றும் உரிமையாளர்களை பவுன் என்பவர் கொடூரமாக கட்டையால் தாக்கினார். இது சம்மந்தமாக வெளியான வீடியோ கடும் கண்டனங்களை சந்தித்தது.

மேலும் சம்மந்தப்பட்ட காளைகள் தலித் இளைஞர்களால் வளர்க்கப்பட்ட காளைகள் என்பதால் சாதி வெறியோடு அவர் தாக்கியதாகவும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து காளைகளை தாக்கிய பவுன் என்பவரை போலிஸார் இப்போது கைது செய்துள்ளனர்.