1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 9 செப்டம்பர் 2020 (07:40 IST)

பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை தீயிட்டு எரிப்பு: அதிர்ச்சி தகவல்

தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் பெண் குழந்தைகள் பிறந்த உடன் கொலை செய்யப்பட்டு வருவது கடந்த சில ஆண்டுகளாக இருந்துவரும் வழக்கமாக உள்ளது. ஆனால் பிறந்து நான்கு நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று தீயில் எரித்து கொல்லப்பட்ட இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனியாருக்கு சொந்தமான தியேட்டர் ஒன்று உள்ளது. இந்த தியேட்டரின் வளாகத்தில் ஆண் குழந்தை ஒன்றின் உடல் பாதி எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது 
 
போலீசார் இதுகுறித்து விசாரணை செய்த போது அந்த குழந்தை பிறந்து நான்கு நாட்களே ஆன ஆண் குழந்தை என்பது தெரியவந்தது. பிறந்து நான்கு நாட்களே ஆன சின்னஞ்சிறு குழந்தையை ஈவு இரக்கமில்லாமல் தீயில் எரித்து கொலை செய்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது