1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 16 ஏப்ரல் 2017 (07:29 IST)

சென்னை தண்ணீர் கஷ்டத்தை தீர்க்க கடவுள் அனுப்பிய 'மாருதா'

சென்னையில் கடந்த சில நாட்களாக தண்ணீர் கஷ்டம் தலைவிரித்து ஆடி வரும் நிலையில் ஆட்சியாளர்கள் மதுக்கடைக்கு இடம் பார்ப்பதிலும், ஆட்சியை தக்க வைத்து கொள்வதிலும் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர்.



 


இந்த நிலையில் சென்னையின் தண்ணீர் கஷ்டத்தை தீர்க்க கடவுளே ஒரு வழி செய்துள்ளார். ஆம், அதுதான் மாருதா புயல். வர்தா புயல் சென்னையை கடந்த சில மாதங்களுக்கு முன் உலுக்கியது அனைவரும் அறிந்ததே.

ஆனால் தற்போது வங்கக் கடலில் அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் உருவாகியுள்ள மாருதா' புயல் சென்னைக்கு பெரிய பாதிப்பு ஏற்படுத்தாது என்றும், ஆனால் அதே நேரத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உண்டு என்றும் வானிலை அறிவிப்பு கூறுகின்றது. இந்த புயல்  நாளை காலையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது. சென்னை தண்ணீர் கஷ்டத்தை போக்க கடவுளே இந்த புயலை உருவாக்கியதாக கருதப்படுகிறது.