1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2019 (11:04 IST)

லலிதா ஜுவல்லரியில் நகைகளை லவட்டியது எப்படி? திருடர்களின் மாஸ்டர் பிரைன்!!

திருச்சி லலிதா ஜுவல்லரியில் திருடர்கள் நகைகளை எப்படி திருடி இருப்பார்கள் என போலீஸார் தங்களது யூகங்களை வெளிப்படுத்தியுள்ளனர். 
 
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே, உள்ள பிரபலமான லலிதா ஜுவல்லரியின் கிளையில், ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளைப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் யாராக இருக்கும் என போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 
 
காவல் துறையினர் ஆய்வு நடத்தியதில், கடையின் பின்புறமுள்ள புனித ஜோசப் பள்ளிக்கும் கடைக்கும் இடையே ஒரே சுவர் என்பதால் பள்ளியின் வழியே பக்கவாட்டு சுவரில் ஒரு ஆள் நுழையும் அளவிற்கு துளையிட்டு கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர். 
இரவுப் பணியில் இருந்த 6 காவலாளிகளும் கடையின் முன்பக்கம் இருந்ததால் அவர்களுக்கு கடையின் பின்புற என்ன நடக்கிறது என்பது தெரிய வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது. மிகவும் கேஸ்வலாக பொம்மை முகமூடி அணிந்து 2 பேர் கடைக்குள் புகுந்து கொள்ளை அடித்திருப்பது தெரியவந்தது. 
 
இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தை எவ்வாறு அரங்கேற்றி இருப்பார்கள் என போலீஸார் யூகித்து உள்ளனர். பள்ளியில் காலாண்டு விடுமுறை என்பதால் அங்கு ஆள்நடமாட்டம் இல்லை. அதேபோல அன்று நல்ல மழை பெய்ததாலும் அதை கொள்ளையர்கள் தங்களுக்கு சதகாம பயன்படுத்திக்கொண்டிடுக்க கூடும். 
கடையில் துளையிட்டு நுழைந்து திருடிய நகைகளை பைகளில் நிரப்பிக்கொண்டு, அந்த பைகளை கயிறு மூலம் கட்டி வெளியே இழுத்து கொண்டுவந்துள்ளனர். யாரேனும் இருக்கிறார்களா இல்லையா என்பதை வாய் திறந்து பேசாமல் கயிறு மூலமாகவே சிக்னல் கொடுத்துள்ளனர். 
 
அதேபோல் நகைகளை திருடியதும் அங்கிருந்து வெளியே வர பிரதான சாலைகளை பயன்படுத்தவில்லை. எனவே எந்த வழையா வந்து எந்த வழியாக போய் இருப்பார்கள் என்பதை கண்டுபிடிக்க போலீஸார் முயற்சித்து வருகின்றனர்.