1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 26 அக்டோபர் 2016 (17:43 IST)

ரம்பாவை நிம்மதியாக இருக்க விடுங்கள் : நடிகை குஷ்பு கோரிக்கை

ரம்பாவை நிம்மதியாக இருக்க விடுங்கள் : நடிகை குஷ்பு கோரிக்கை

நடிகை ரம்பா தனது கணவன் மற்றும் கணவருடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அவரை நிம்மதியாக இருக்க விடுங்கள் என்றும் நடிகை குஷ்பு கோரிக்கை விடுத்துள்ளார்.


 

 
நடிகை ரம்பா தனது கணவரிடமிருந்து விவகாரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக நேற்று காலை செய்தி பரவியது. ஆனால், பிரிந்திருக்கும் தனது கணவருடன் சேர்த்து வைக்க கோரித்தான் அவர் மனு செய்தார் என்று நேற்று மாலை செய்தி வெளியானது.
 
ஆனால் தான் இரண்டையுமே செய்யவில்லை.. நான் குடும்பத்துடன் நலமாக இருக்கிறேன் என்று நடிகை ரம்பா கூறியதாக இன்று காலை செய்திகள் வெளியானது. இப்படி அவரை பற்றி வெளியான செய்திகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள குஷ்பு “ரம்பா தனது அழகான இரு பெண் குழந்தைகள் மற்றும் அன்பான கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார். எனவே அவரை நிம்மதியாக இருக்க விடுங்கள். அவர் மனது அமைதியடையட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.