தொடர்புடைய செய்திகள்
- மனம் தளர வேண்டாம்.. குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்..!
- "என்கவுண்டர் கேங்ஸ்டர்" படப்பூஜையை தொடங்கி வைத்தார்- புதுச்சேரி முதல்வர் N.ரங்கசாமி!
- தேர்தலுக்கு பின் வந்த ரிப்போர்ட்.. அதிர்ச்சியில் ஈபிஎஸ்.. லிஸ்ட் எடுக்க உத்தரவா?
- அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லைன்னா..! பெண் அமைச்சரை வன்கொடுமை செய்த கும்பல்!
- சுனில் நரைனின் ஆட்டம் இளம் வீரர்களைப் பாதித்தது… லக்னோ அணி கேப்டன் கே எல் ராகுல்!
கூலிப்படையினரால் தான் ஜெயக்குமார் கொல்லப்பட்டிருப்பார்: கே.எஸ்.அழகிரி அதிர்ச்சி தகவல்..!
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கூலிப்படையினரால் தான் கொலை செய்யப்பட்டு இருப்பார் என முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த ஜெயக்குமார் திடீரென கடந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் எரிந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவரது மரணம் குறித்து மர்மம் இருப்பதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை கூறி வருகின்றனர். மேலும் அவர் எழுதியதாக கூறிய இரண்டு கடிதங்கள் கிடைத்துள்ளதை அடுத்து அந்த கடிதங்கள் உண்மையானதானா என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு தற்போதைய எம்எல்ஏ ரூபி மனோகரன் ஆகியோர்கள் மீது ஜெயக்குமார் அந்த கடிதத்தில் குற்றம் சாட்டிய இருந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் இந்த மரணம் குறித்து விசாரணை செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது
இந்த நிலையில் காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கூலிப்படையினரால்தான் கொல்லப்பட்டு இருப்பார் என்றும் ஜெயக்குமார் மரணம் வழக்கை காவல்துறை முறையாக விசாரித்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
