1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 12 செப்டம்பர் 2016 (13:06 IST)

காவிரி தமிழகத்துக்குதான் சொந்தம்: கன்னட டிரைவருக்கு அடி உதை (வீடியோ)

கன்னட அமைப்பினர் பெங்களூரில் தமிழ் இளைஞரை தாக்கியது போல், ராமேஸ்வரத்தில் தமிழக அமைப்பினர் கன்னட டிரைவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.


 

 
கர்நாடகாவில் காவிரி நதி நீரை தமிழகத்துக்கு திறந்து விடுவதை எதிர்த்து கன்னட அமைப்பினர் தீவிரமாக போராடி வருகின்றனர். கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துக்கள் அனைத்து அடித்து நொறுக்கப்படுகிறது.
 
இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் கன்னட பேருந்துகளை அடித்து நொறுக்கினர். தமிழக வாழ்வுரிமை கட்சி அமைப்பினர் கன்னட பேருந்து ஓட்டுனர் ஒருவரை கட்டைகளால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
 
மேலும் அந்த ஓட்டுனரை மண்டியிடச் செய்து காவிரி தமிழகத்துக்குதான் சொந்தம் என சொல்ல வைத்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பழிக்கு பழி என்று இன வெறியாக காவிரி விவகாரம் மாறியுள்ளது. நடிகை ரம்யா காவிரி விவகாரம் குறித்து அருமையான பதிவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
 
இரு மாநில தலைவர்கள், காவிரி நடுவர் குழு மன்றம் மற்றும் விவசாயிகள் ஆகியோர் ஒன்றிணைந்து முடிவு எடுக்க வேண்டிய நிலையை விட்டு இரு மாநில மக்களும் ஒருவர் ஒருவரை தாக்கி கொள்வது தவறான செயலாகும்.
 
நன்றி: ANI