1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kamal comfort to Usha husband Raja

பலியான கர்ப்பிணி உஷாவின் கணவருக்கு கமல் ஆறுதல்

kamal
நேற்றிரவு போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் என்பவரின் தகாத செயலால் திருச்சியை சேர்ந்த மூன்று மாத கர்ப்பிணி பெண் உஷா என்பவர் பரிதாபமாக பலியானார். இந்த நிலையில் ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டிருந்த போதிலும் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அந்த பகுதியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

உஷாவின் மரணத்திற்கு காரணமான ஆய்வாளருக்கு அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்ததோடு, சட்டப்படி அவருக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பலியான உஷாவின் கணவர் ராஜாவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தொலைபேசியில் ஆறுதல் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
ஹெச்.ராஜா பொது மன்னிப்பு கேட்க வேண்டும் - ஓ.பி.எஸ் அதிரடி பேட்டி