1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2016 (18:19 IST)

ஜெயலலிதா தோல்வி பயத்தில் மது விலக்கை அறிவித்துள்ளார் - ஜவாஹிருல்லா

ஜெயலலிதா தோல்வி பயத்தில் மது விலக்கை அறிவித்துள்ளார் என்று மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
 

 
இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடத்தில் பேசிய ஜவாஹிருல்லா, ‘’தமிழகத்தில் முழுமையாக மதுவிலக்கை அமல்படுத்தகோரி பல போராட்டங்கள் நடத்தி வருகிறோம். ஆட்சியில் இருந்த அதிமுக அரசு சட்டமன்றத்தில் பலமுறை மதுவிலக்கு சாத்தியம் இல்லை என அழுத்தமாகவே கூறியது.
 
தமிழக தேர்தலை சந்திக்கும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என கூறுகிறார். இது ஒரு வெற்று நாடக பேச்சு.
 
ஆட்சியில் இருக்கும் போது மது விலக்கை அமல்படுத்தாத ஜெயலலிதா இனி ஆட்சிக்கு வரமுடியாது என்ற நிலையில் தோல்வி பயத்தில் இப்படி அறிவிக்கிறார். இது தமிழக மக்களை ஏமாற்றும் செயல் ஆகும். இதை ஏற்று கொள்ள மாட்டார்கள். இத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று மது விலக்கை அமல்படுத்தும்’’ என்று கூறியுள்ளார்.