வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 6 நவம்பர் 2015 (22:36 IST)

கொடநாட்டிலிருந்து அம்மா 8ஆம் தேதி சென்னை ரிட்டன்

கொடநாட்டிலிருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா 8ஆம் தேதி சென்னைக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் இருந்து கொடநாட்டு எஸ்டேட்டுக்கு சென்றார். அங்கிருந்து அரசு பணிகளை கவனிப்பார் என தமிழக அரசு அறிவித்தது.
 
கொடநாட்டில் தங்கிருந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் வியூகம் குறித்தும், எதிர்கட்சிகளை அடக்குவது குறித்தும், சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதம் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், 8ஆம் தேதி அன்று கொடநாட்டில் இருந்து முதல்வர் ஜெயலலிதா, சென்னை திரும்ப உள்ளதாக அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.