தொடர்புடைய செய்திகள்
- அமைச்சர் பதவி தருகிறேன் ; ஆசை வார்த்தை கூறும் எடியூரப்பா : வெளியான ஆடியோ
- பேரம் பேசும் பாஜக: ஆடியோ வெளியிட்ட காங்கிரஸ்!
- யாரு வீட்டு காசுல யாருக்கு நினைவிடம் கட்டுவது? உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
- எடப்பாடி பழனிசாமியின் ஸ்டைல் வித்தியாசமானது: திண்டுக்கல் சீனிவாசன்!
- ஜெயலலிதாவை விட சிறப்பான ஆட்சி: ஈபிஎஸ் ஆட்சி குறித்து திண்டுக்கல் சீனிவாசன்
ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு!
2016ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் பேசிய 52 வினாடிகள் ஆடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதாவின் மரணம் தற்போது வரை மர்மமாக உள்ளது. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா பெசிய 52 வினாடிகள் ஆடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
ஆறுமுகசாமி விசாரணையில் மருத்துவர் சிவக்குமார் தாக்கல் செய்த ஆடியோ பதிவை வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் அறிவுறுத்தலின் பேரில் அவரின் உதவியாளருக்கு, மருத்துவரும் இந்த ஆடியோ பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மூச்சு திணறலின்போது ஜெயலலிதா பேசியது பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், ரத்த அழுத்தம் 140/80 இருக்கிறது என்று மருத்துவர் கூறுகிறார். அது எனக்கு இயல்பு தான் என்று ஜெயலலிதா கூறுகிறார்.
அடுத்த கட்டுரையில்
