வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 9 ஜனவரி 2016 (00:13 IST)

ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி: பாமக வரவேற்பு

இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்கி மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதை பாமக வரவேற்கிறது என ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு கடந்த சில மாதங்களாக, இந்த ஆண்டு நடைபெறுமா என்பது குறித்து  ஐயம் நிலவி வந்தது.
 
இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்கி மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதை பாமக வரவேற்கிறது.
 
இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு  அனுமதி அளித்த பிரதமர் மோடி மத்திய வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் இதற்காக பாடுபட்ட மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி  தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.