1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 14 நவம்பர் 2023 (14:41 IST)

நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.- வானிலை மையம்

rain red umbrella
தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என தகவல் வெளியாகும் நிலையில், தமிழகத்தில் இன்று கனமழை பெய்யயும் எனவும் 5 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது. தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று வரும் 16 ஆம் தேதி ஒடிஷா கடற்கரை நோக்கி நகரக்கூடும். அடுத்த 3 நாட்களுக்கு தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும். செங்கல்பட்டு,  காஞ்சிபுரரம், திருவண்னாமலை, கள்ளக்குறிசி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.