செவ்வாய், 2 ஜூலை 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 12 ஆகஸ்ட் 2023 (18:29 IST)

சென்னை உள்பட 35 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை உள்பட 35 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில்  மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சற்று முன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. 
 
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவித்துள்ளது.
 
மேலும் காரைக்கால் மற்றும் புதுச்சேரியிலும்  மிதமான மழை முதல் கன மழை வரையும் என்றும் இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran