1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 29 அக்டோபர் 2022 (11:04 IST)

தமிழ்நாட்டுக்கு ஆரஞ்ச் அலர்ட்: மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை!

rain
தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இந்த நிலையில் நவம்பர் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் வட தமிழ்நாட்டில் முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இதனால் தமிழ்நாட்டுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவித்துள்ளது 
ஏற்கனவே தமிழ்நாடு புதுச்சேரி ஆந்திரா ஒரிசா ஆகிய மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran