தொடர்புடைய செய்திகள்
- பலூசிஸ்தானில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு - 26 பேர் பலி
- சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்..! ஏப்ரல் 4-ல் அமித் ஷா தமிழக வருகை..!!
- வருண் காந்தியை கைவிட்ட பாஜக.. காங்கிரஸ் அழைப்பு விடுப்பதாக தகவல்..!
- உதயநிதி சிறுபிள்ளைத்தனமாகப் பேசி மக்களை ஏமாற்ற பார்க்கிறார்: கேபி முனுசாமி
- திமுக-வில்தான் உதயா அணி, துர்கா அணி, மாப்பிள்ளை அணி உள்ளது! உதயநிதிக்கு டிடிவி தினகரன் பதிலடி
ரூ.921 கோடி சொத்து மதிப்பு கொண்ட சுயேட்சை வேட்பாளர்
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார்.
அதன்படி தேர்தல் விதிகள் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது.
நாடு முழுவதும் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கன. வேழவேந்தனுக்கு ரூ. 921 கோடி சொத்து மதிப்பு உள்ளதாக படிவத்தில் பூர்த்தி செய்துள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வரும் அவர் தனது கணிப்பொறி திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர், ''தான் எம்.சி.ஏ படித்துள்ளதாகவும், தன் கணிப்பொறி திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். இதன் முலம் 25 லட்சம் பேருக்கு வேலை கொடுக்க முடியும் எனவும், இந்த பிராஜக்டை அரசுடைமை ஆக்கப்பட வேண்டும் என்றும், தான் ஒரு ஜமீன் பரம்பரை ''என்று தெரிவித்துள்ளார்.
