1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வியாழன், 2 அக்டோபர் 2014 (08:26 IST)

4 காவல் துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் பதக்கம்

கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் திறம்படச் செயலாற்றியதற்காக 4 காவல் துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் பதக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
இது குறித்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அபூர்வ வர்மா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
 
“கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் திறம்படச் செயலாற்றியதற்காக 4 காவல் துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் துறைப் பதக்கம் வழங்கப்படுகிறது.
 
திருச்சி மாநகர மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் துணை ஆணையர் கே.பாலகிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட மது ஒழிப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கே.சண்முகம், திருச்சி மண்டல மத்திய விசாரணைப் பிரிவு காவல் துறை ஆய்வாளர் பி.பத்மாவதி, விழுப்புரம் மது ஒழிப்புப் பிரிவு காவல் துறை உதவி ஆய்வாளர் எம்.பாபு ஆகியோருக்கு இந்தப் பதக்கம் வழங்கப்படும்.
 
இந்தப் பதக்கங்களை தமிழக முதலமைச்சர் 2015 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் வழங்குவார். இந்தப் பதக்கத்துடன் தலா ரூ.20 ஆயிரம் பணமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.