வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 17 டிசம்பர் 2015 (19:07 IST)

பீப் பாடல் பற்றிய கேள்வி: பத்திரிக்கையாளருக்கு டோஷ் விட்ட இளையராஜா (வீடியோ)

பீப் பாடல் - இளையராஜா கோபம்

நடிகர் சிம்பு பாடி சர்ச்சைக்குள்ளான பீப் பாடல் பற்றி ஒரு பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு இளையராஜா கோபமடைந்து அவரை திட்டி தீர்த்து விட்டார்.


 
 
சென்னை மக்கள் மழையால் பாதிக்கப்பட்ட போது இசையமைப்பாளர் இளையராஜா, அவரே களத்தில் இறங்கி ஏராளமான உதவிகள் செய்தார். மழை வெள்ளத்தால் சூழ்ந்த ஒரு காது கேளாதவர் பள்ளிக்கு சென்று, அங்கு தவித்த குழந்தைகளை மீட்டார். மேலும் அவர்களுக்கு உணவு பொருட்களும் வழங்கினார்.
 
இந்நிலையில், மழையால் சென்னை மக்கள் பாதிக்கப்பட்டதை பற்றி பத்திரிக்கையாளர்களிடம் அவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ஒரு செய்தியாளர், சமீபத்தில் வெளியாகி சர்சைக்குள்ளான பீப் பாடல் பற்றி அவரிடம் கருத்து கேட்டார்.
 
அதில் கோபமடைந்த இளையராஜா “உனக்கு அறிவிருக்கிறதா? அதற்காகவே நாம் இங்கே கூடியிருக்கிறோம்?” என்று கேள்வி கேட்டு அந்த அந்த செய்தியாளரை ஒரு வழி பண்ணி விட்டார். 
 
அருகிலிருந்தவர்கள் அவரை சமாதனப்படுத்தினர்.அந்த சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது. 
 
அதை நீங்களே பாருங்கள்...
 

நன்றி : நியூஸ்7