1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 9 அக்டோபர் 2018 (07:30 IST)

திருமணமான 9 மாதத்தில் மனைவியின் தலையை துண்டித்த கணவன்: அதிர்ச்சி தகவல்

திருமணமான ஒன்பதே மாதத்தில் உறவுக்கு வரமறுத்த மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் திருச்சி அருகே திருவெறும்பூரில் நடந்துள்ளது.

திருவெறும்பூர் அருகே காட்டூர் பிலோமினாள்புரம் என்ற பகுதியை சேர்ந்த சங்கர் சகாயராஜ் என்பவருக்கும் தஞ்சை மாவட்டம் கீழதிருப்பந்துருத்தியை சேர்ந்த ஜெசிந்தா ஜோஸ்பின் என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் பின்னர் இருவரும் அடிக்கடி கருத்துவேறுபாடுகளால் சண்டை போட்டு வந்ததால் ஜெசிந்தா கடந்த சில நாட்களுக்கு பின்னர் தாய்வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் சகாயராஜ் பெற்றோர் மருமகளிடம் சமாதானம் பேசி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

இந்த நிலையில் சகாயராஜ், ஜெசிந்தாவை உறவுக்கு அழைத்ததாகவும், ஆனால் ஜெசிந்தா மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சகாயராஜ், ஜெசிந்தா தூங்கும்போது தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்துவிட்டு பின்னர் கழுத்தை தனியாக அறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதன்பின்னர் சகாயராஜ் போலீசில் சென்று சரண் அடைந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருமணமான ஒன்பதே மாதத்தில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவனின் அதிர்ச்சி செயலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.