வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 4 ஏப்ரல் 2020 (10:42 IST)

அதிகரிக்கும் ஆர்டர்கள்; அதிகம் இல்லாத நேரம் – திணறும் உணவகங்கள்!

ஊரடங்கு உத்தரவால் உணவு டெலிவரி செய்ய கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளதால் உணவகங்கள் மற்றும் டெலிவரி பாய்கள் பெரும் இக்கட்டை சந்தித்து வருகின்றனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அனைத்து உணவகங்களும், ஊபர் ஈட்ஸ், ஸொமாட்டோ போன்ற உணவு சப்ளை நிறுவனங்களும் செயல்பட தடை விதிக்கப்பட்டது. பிறகு சில நாட்களில் அனுமதி திரும்ப அளிக்கப்பட்டது. அதில் உணவகங்கள் வாடிக்கையாளர்களுக்கு பார்சல் மட்டுமே அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்விகி, ஸொமாட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் செயல்பட காலை 6.45 முதல் 9 மணி, மதியம் 11.45 முதல் 2 மணி மற்றும் மாலை 5.45 முதல் 8.30 மணி ஆகிய நேரங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனால் குறிப்பிட்ட அந்த சமயத்திற்குள் உணவகங்களுக்கு ஏகப்பட்ட ஆர்டர்கள் குவிந்து விடுகின்றன. அவற்றை தயார் செய்து டெலிவரி பாய்களுக்கு கொடுக்கவும், அதை டெலிவரி பாய்கள் வாடிக்கையாளருக்கு கொண்டு சென்று கொடுக்கவும் ஏக நேரம் பிடிக்கிறது. இதனால் ஆர்டர் செய்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கு அரசு அறிவித்த நேரத்திற்குள் உணவை சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் டெலிவரி நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் என உணவகங்கள் கேட்டு வருகின்றன. மற்றொருபுறம் டெலிவரி பாய்களாக வேலை பார்த்த பலர் வெளியூர்க்காரர்கள் என்பதால் அவர்கள் தங்கள் ஊர்களுக்கு சென்று விட்டதால் உணவு டெலிவரி செய்யவே ஆட்கள் பற்றாக்குறை நிகழ்வதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஒரே சமயத்தில் பல ஆர்டர்களை எடுக்க வேண்டியுள்ளதாக சிறிதளவே உள்ள டெலிவரி ஆட்கள் தெரிவித்துள்ளனர்.