1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 நவம்பர் 2022 (16:30 IST)

இன்று இரவு 18 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை

rain
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் இன்று இரவு தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், குமரி, நெல்லை, தூத்துக்குடி, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஆகிய 18 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வர பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,.
 
 குறிப்பாக தமிழகத்தில் உள்ள சென்னை உள்பட வட மாவட்டங்களில் தான் அதிக மழை பெய்யும் என்று கூறப்படுவதால் அம்மாவட்ட மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Mahendran