1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 19 டிசம்பர் 2023 (14:13 IST)

இன்னும் சில மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை: தென்மாவட்ட மக்கள் அச்சம்..!

Rain
தென் மாவட்டங்களில் மழை படிப்படியாக குறைந்து விடும் என்றும் இனி நிவாரண பணிகளை முழு வீச்சில் கவனிக்கலாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் இன்று காலை கூறியிருந்த நிலையில் இன்னும் சில மணி நேரங்களில் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
ஏற்கனவே தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது என்பதும் பல பகுதிகளில் தரை தளம்  மூழ்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மீண்டும் தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்ற சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்னும் சில மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran