தொடர்புடைய செய்திகள்
- ஹீரோக்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வர தயக்கம் ?
- 500 ரூபாய்க்கு வார வட்டி 50 ரூ – திருச்சியில் கடன் வாங்கி குடித்த மதுப்பிரியர்!
- தினமும் 10,000 தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க திட்டம் - முதல்வர்
- எக்ஸாம் எழுதும் மாணவர்களை விட பிஸியாய் டென்ஷனாய் சுழலும் செங்கோட்டையன்!
- டோக்கன் வாங்கியதுமே கலர் ஜெராக்ஸ்! – மதுப்பிரியர்கள் கையும் டோக்கனுமாக கைது!
பாழா போன புயலால வந்தது... தமிழகத்தில் வெப்பம் கொளுத்துமாம்!!
தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்ககூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் சில நாட்களுக்கு முன்பாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்ததை தொடர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது இதனைத்தொடர்ந்து புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் நாளை வரை வடமேற்கு திசை நோக்கி நகரும், பின்னர் திசையை மாற்றி வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லும். 20 ஆம் தேதிக்கு பின்னர் மேற்கு வங்கம் அல்லது பங்களாதேஷ் ஒட்டிய பகுதியில் கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனால் தமிழகத்தில் நேரடி மழை இருக்காது, ஆனால் புயல் விலகி செல்வதால் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர். தற்போதைய தகவலின் படி வட தமிழகத்தில் 2 - 3 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
