1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 8 அக்டோபர் 2021 (15:25 IST)

27 புரோட்டாக்கள் சாப்பிட்டால் தங்க நாணயம் பரிசு !

சினிமாவைப் போலவே தற்போது 27 புரோட்டா சாப்பிட்டால் தங்க நாணயம் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது பிரபல பிரியாணிக்கடை.

தூத்துக்குடி மாவட்டத்தில் விஐபி என்ற பெயரில் ஒரு பிரியாணிக் கடை சமீபத்தில்  துவங்கப்பட்டுள்ளது. இந்தக் கடையின் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு முக்கிய அறிவிப்பை இக்கடையினர் வெளியிட்டுள்ளனர். அதில், ஒரேஎ நேரத்தில் 27 புரோட்டா, ஒரு சிக்கன் நூடுல்ஸ், ஃபலூடா ஆகியவற்றை சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளதால் இளைஞர்கள் பலரும் இதில்  ஆர்வத்துடன் கலந்துகொண்டுள்ளனர்.