வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 4 ஆகஸ்ட் 2021 (22:04 IST)

திருப்பூர் மாவட்டத்திற்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் படிப்படியாக உயர்ந்து வருவதை அடுத்து கோவை உள்ளிட்ட ஒரு சில நகரங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான திருப்பூரில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் படுத்தப் பட்டுள்ளன. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாளை முதல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் டாஸ்மாக் மது கடைகள் காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பால் மருந்து பொருட்கள் மற்றும் காய்கறிகள் தவிர மற்ற அனைத்து கடைகளுக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது