1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 5 நவம்பர் 2021 (23:00 IST)

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி! 30 பேர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த 30 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அரசுவேலை வாங்கித் தருவதாக கூறி  மக்களிடம் பணம் பறித்துவரும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தார். இதன்படி, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்த 30 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், முன்னாள் அதிமுக அமைசர் ஓஎஸ். மணியனின் உதவியாளர் மற்றும் மறைந்த அதிமுக நிர்வாகி பரிதி இளம்வழுதியின் 3 வது மனைவி உள்ளிட்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.