வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 19 நவம்பர் 2015 (06:37 IST)

தமிழகத்தில் வெள்ள நிவாரண பணிகள் சரியில்லை: சொல்வது குஷ்பு

தமிழகத்தில் வெள்ள நிவாரண பணிகள் முறையாக நடைபெறவில்லை என நடிகை குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னையில் மிதந்தது. இந்த நிலையில், சென்னை பெரம்பூர், மேட்டுப்பாளையம், கோவிந்தன் தெரு, அருந்ததியர் நகர் ஆகிய பகுதிகளில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு  ஆகியோர் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர். அப்போது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேஷ்டி மற்றும் சேலை மற்றும் போர்வை ஆகியவற்றை வழங்கினர்.
 
அப்போது, அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு  செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தேவையான உதவிகளை செய்யவில்லை. குறிப்பாக, வெள்ள நிவாரண பணிகள் முறையாக நடைபெறவில்லை. வெள்ள நிவாரண பணிகளுக்காக தமிழர அரசு ரூ.500 கோடி மிகவும் குறைவான தொகை ஆகும் என்றார்.