வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 24 டிசம்பர் 2015 (12:58 IST)

திரிபுரா முதலமைச்சருக்கு ஜெயலலிதா கடிதம்

தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பிற்கான நிவாரண உதவியாக 1 கோடி ரூபாய் வழங்கிய திரிபுரா மாநில முதலமைச்சர் மாணிக் சர்க்காருக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  நன்றி கூறி கடிதம் எழுதியுள்ளார்.


 

 
ஜெயலலிதா எழுதியுள்ள அந்த கடிதத்தில், "தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உதவியாக, தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியை நிதியுதவியாக வழங்கியமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
 
பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நிவாரண உதவிகளை எனது தலைமையிலான அரசு செவ்வனே விரைந்து செய்து வருகிறது என்பதை இங்கே குறிப்பிடுகிறேன்.
 
உங்களது ஆதரவுக்கு மிக்க நன்றி" என்று அந்த கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.