வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 19 பிப்ரவரி 2016 (23:13 IST)

திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் நலன் காக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் நலன் காக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் நலன் காக்கப்படும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

 
ஈரோட்டில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-
 
ஈரோட்டில் நடைபெற்ற விவசாயிகள் "கடன் விடுதலை மாநாட்டில்" பங்கேற்றுப் பேசினேன். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது, 7000 கோடி ரூபாய் விவசாயக் கடனை தள்ளுபடி செய்தது உள்ளிட்ட கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்தேன்.
 
இப்போது நடைபெறுகின்ற அதிமுக ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது மற்றும் எலிக்கறி சாப்பிடும் கொடுமைக்கு ஆளானது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விளக்கிப் பேசினேன். விவசாயிகளின் நலனுக்கு திமுக கழகம் என்றும் துணை நிற்கும் என்று உறுதியளித்து, விரைவில் சட்டமன்றத் தேர்தலுக்கு வெளியாகும் கழக தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் நலனுக்கும், விவசாயத்தின் வளர்ச்சிக்கும் உரிய திட்டங்களை தலைவர் கருணாநிதி அறிவிப்பார் என்று தெரிவித்தேன் என்றார்.