1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 9 ஜூன் 2020 (16:12 IST)

தமிழர்களை மீட்க பிரபல ஹீரோ அரசுக்கு கோரிக்கை !

கொரோனா உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வெளிநாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மத்திய மாநில  அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்கு பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் நேற்று தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ தமிழர்களை மீட்க வேண்டும் என போராட்டம் நடத்தினார்.

இதற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் டி.ராஜேந்தர் தமிழர்களை தாங்கிப் பிடிக்க இந்த பதாகையை தாங்குகிறேன் என தெரிவித்து அவர் கையில் ஏந்தியுள்ள பதாகையில்,
வெளிநாட்டில் பணிபுரிந்து கொரோனா நெருக்கடியால் தாயகம் வர விரும்பும் தமிழர்களை விரைந்து அரசு செலவில் மீட்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
 

இந்நிலையில் இன்று நடிகர் சத்யராஜ் மத்திய மாநில அரசுகளுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். அதில்,வெளிநாட்டில் வேலை செய்து வரும் தமிழர்களை அரசு செலவில் தாயகம் அழைத்து வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.