செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 17 அக்டோபர் 2018 (17:45 IST)

சென்னையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடல்: தண்ணீர் பற்றாக்குறை காரணமா?

சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ இன்று பராமரிப்பு காரணமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை  ராயப்பேட்டைப்பகுதியிலுள்ள மிக பிரமாண்டமான எக்ஸ்பிரஸ்  அவென்வியூ எனும் மால் பலநூறூ ஷோரூம்கள் எஸ்கேப் திரையரங்குகள் என அகிதமாக இயங்கிவருகிறது.
 
தினம் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த மாலுக்கு வந்து பொழுது போக்கியும் பொருட்கள் வான்ம்க்கியும் செல்லுகின்றனர்.
 
இந்நிலையில் இன்று ஷாப்பிங் மாலை மூடப்போவதாக நேற்று இணையதளப்பக்கத்தில் தெரிவித்திருந்தது.
 
தற்போது தமிழ்நாடு முழுவதும் டேங்கர் லாரிகள் மற்றும்குடிநீர் கேன் உற்பத்தியாளார்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் ஏற்பட்டுள்ள குடிநீர் தாட்டுப்பாட்டின் காரணாமாக ஷப்பிங் மால் மூடப்பட்டுள்ளதோ என பரவெலாக பேசப்பட்டு வருகிறது.
 
எனினும் இந்த வளாகத்தில் உள்ள எஸ்கேப் திரையரங்குகள் எப்பவும் போலெ செயல்பட்டு வருகிறது.